திருமண நாள் வாழ்த்து கவிதை: திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள், wedding wishes in tamil, திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள், Wedding Anniversary Wishes In Tamil, Thirumana Naal Valthukkal In Tamil Words, Thirumana Naal Valthukkal, திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் in tamil language.

திருமண நாள் வாழ்த்து கவிதை
இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

கையோடு கை சேர்த்து இணைந்த
இதயங்கள் பல்லாண்டு காலம்
வாழ வாழ்த்துகிறேன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
அத்தனையும் மறந்துபோக வைத்த
அன்பானவன் தான்
திருமண பரிசளிக்கிறான் எனக்கு
அவன் எனக்கு கிடைத்து விட்டதை
மறந்து.!

நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தோடு
நம் பிள்ளைகளின் ஆசையோடு இன்னும்
ஆலமரமாய் தழைக்கட்டும்
இந்த உறவு விழுதுகளாய் தொடரட்டும்
நம் தலைமுறை..!
அன்பே இத் திருமண நாள் ஆனது
ஆனந்த நினைவுகளுடன்
நம் இரு மனதையும்
ஒரு மனதாய் இணைத்து
ஈடில்லா துணையை பெற்ற
நான் உன் அளவில்லா அன்பில்
அம்மாவையும் ஊன்றுகோல் போன்ற
உன் அரவணைப்பில் அப்பாவையும்
என்றென்றும் காணும் நான் ஏனோ
உன்னிடத்தில் தோற்றுப் போகிறேன்..
ஐயம் கொள்ளும் சமயத்தில்
ஒரு குழந்தையை போல்
அணைத்து கொள்கிறாய்
நெஞ்சில் ஓராயிரம் ஜென்மம் எடுப்பினும்
நீயே என் வாழ்க்கை துணையாய் அமைய
அதே கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
என் உயிரே.!

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்
இணைபிரியா வாழ்வில்
இன்பமே என்றும் கொள்வீர்
முடிச்சுப்போட்ட வாழ்க்கையில்
முடிவிலா மகிழ்ச்சி காண்பீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக வாழ..
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்
வாழ்க்கையின் அர்த்தங்களை
நீங்கள் புரிந்து..
பள்ளம் மேடுகளை நீங்கள் கடந்து..
புன்னகை சோலை வனத்தில்
பூத்து குலுங்க எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
செல்வங்கள் பதினாறும் பெற்று..
இன்பங்கள் அளவின்றி தொட்டு..
இன்னல்கள் இல்லா
வாழ்க்கையை நகர்த்த
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

வானம் பாடி பறவையாய் பறந்து..
சுதந்திர காற்று, முகிலாய் மிதந்து..
ஆயுள் முழுவதும் இணைந்தே வாழ..
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
அளவோடு ஆசைகளை சுமந்து..
அளவின்றி இன்பங்களை பருகி..
தள்ளாடும் வயதினிலும் கூட..
சுமையென்று நினைக்காமல்
சேர்ந்தே வாழ எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து..
இன்னல்கள் வந்தால்
பொறுத்துக்கொண்டு..
இரு வரி கவிதையாய்
இணைந்து வாழ எனது வாழ்த்துக்கள்..!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
சந்தோஷமா கொண்டாடுங்க
இந்த நாளை..
இன்னைக்கு இருக்கிற
அதே அன்பும்.. அதே பாசமும்..
அதே சந்தோஷமும்..
இன்னும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்களுக்குள் குறையாமல்
இருக்க வாழ்த்துகிறேன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

Wedding Anniversary Wishes In Tamil
நேசங்கள் நீர் போல குவிந்து..
சொந்தங்கள் கடல் போல
இணைந்து என்றென்றும்
உங்கள் அரவணைப்பில்
இணைந்து வாழ
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
தெளிந்த நீராய்
உங்கள் எண்ணங்கள் ஓட..
எதிலும் தடையில்லாமல்
எங்கும் ஜெயிக்க..
தலைக்கனம் இல்லாமல்
தவழ்ந்து போக
எனது வாழ்த்துக்கள்.!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

துன்பங்கள் என்று வந்தால்..
உன் கணவனுக்கு தோளாகவும்..
வெற்றி என்று வந்தால்..
என் மனைவிதான் காரணம் என்றும்
இணைபங்கு கொள்ள
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!
கதிரும் கிழக்கும் போல நிலவும் ஒளியும் போல என்றும் ஒற்றுமையாய் வாழ வாழ்த்துகிறோம்

நம் திருமண நாளில் என் மனதும் உன் மனதும் இடமாற்றம் செய்யப்பட்டதை உலகிற்கே காட்டவே இந்த மாலை பரிமாற்றம்…!
மெட்டி அணிவித்து உன்னை எனக்குள் கட்டிப்போட்டு கொண்டேன்

நம் பயணிக்க இருக்கும் வாழ்வில் எதிர் கொள்ள இருக்கும் துன்பம் என்னை கடந்தே உன்னை நெருங்க வேண்டும் என்பதற்கே உன் கரம் பற்றி அக்கினி வலம் வருகிறேன் நான் !!!
சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா உனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்…..

Thirumana Naal Valthukkal In Tamil Words
பல தேவதைகள் கூடி வாழ்த்து சொல்ல பதுமை அவள் மணமேடை ஏற பூ மழையாய் மகிழ்ச்சி பொழிய காதல் கணவனுடன் கை கோர்க்க உன் வாழ்வில் என்றும் இன்பம் திளைக்க என் உயிர் தோழிக்கு மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்
அன்பு எனும் வடம் பிடித்து திருமணம் எனும் தேர் இழுக்கும் உங்கள் வாழ்வில் புயல் போல் வரும் துன்பங்கள் தென்றலாய் மாற வாழ்த்துகிறோம்…! மனமாற வாழ்த்துகிறோம்…

நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக ஒன்றாக இருந்தீர்கள் என்பது பற்றி அல்ல.’ நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறீர்கள் என்பது பற்றியது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவன் பயணமும் ஒன்றாகும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்.

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக…. நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக… என் அன்பான வாழ்த்துக்கள்…!
வெட்கங்கள் ஊமை மொழியாகும், ஆசைகள் உணர்வின் மொழியாகும், பாஷைகள் இதழின் மொழியாகும், காதல் திருமணத்தின் மொழியாகும்

பால் நிலவும் பகல் சூரியனும் நல் சொந்தங்களும் இனிய நட்புகளும் இணைந்து மகிழ்ந்து வாழ்த்தும்.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
மிகப்பெரிய பூஞ்சோலை ஒன்று சில மலர்களை கையில் வைத்திருக்கிறது ….. நீ என்னுடன் பூபந்து விளையாடுகிறாய் !!!

Thirumana Naal Valthukkal
காலமெல்லாம் – ஆம் உங்கள் ஆயுள் காலமெல்லாம் இதே நெருக்கம், அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில் ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்….
நாள் பார்த்து பந்தலிட்டு இரு மனதிலும் கனவால் ஊஞ்சலிட்டு முன்றலில் வாழை மரம் நட்டு ஊர் சாட்சியாய் நடக்கும் உயிர்களின் புதுயுலகம் திருமணம்

இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். திருமண நாள் வாழ்த்துக்கள்
இணைபிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…

மஞ்சள் குங்குமம், மயக்கும் மலர்மணம்… கொஞ்சும் குழந்தையோடு, குலைவாழையென குலம் செழிக்க… நெஞ்சம் நிறைய, கொஞ்சம் குறையா குணம் கொண்டு… இப்பிரபஞ்சம் காணா எம்மன்பு சகோதரனே! வாசம் குறையா, வனப்பு குறையா அன்பு மலர்ந்திட வீசும் தென்றலாய், விடியல் வெளிச்சமாய்…. என்றும் உம் விழியில் சுமந்திடும் உம் ஒவ்வோர் உயர்விலும் உற்றாறோடு உறுதுணையாய் எப்போதும் நாங்கள்! மனதோடு உறவாடி நிறைகுடமாய் நீடூழி வாழ…
திருமண நாள் வாழ்த்துக்கள் பாடல்நிறைந்த ஆயுளு
குன்றா நலமும்

திருமணம் என்பது அழகான கலை அதில் ஆயிரம் வாழ்க்கை கிளை ஒன்று முறிந்தாலும் மரமே விழுந்துவிடும்
நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாக்கி வாழ்ந்திடு அவள் என்ற பொருளில் நீ என்பதை சொல்லாக்கி வாழ்ந்திடு இதை விட ஆனந்தம் யுகத்திலில்லை

எழில் பொங்கும் உன் முகம் அதை என் விழி காணும் போதிலே வழிமாறிப் போகுதே என் வாழ்ககையின் பாதை அப்பாதையெங்கும் என் கைகோர்த்து நடக்குதே என் தேவதை அது நீதானே
முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது

பத்துப் பொருத்தங்களைப் பார்த்து, ஒன்பது கோள் நிலைகளை அறிந்து, எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து, பஞ்ச பூதங்களும் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க, மூன்று முடிச்சுகளால் இரு மனங்கள் ஒன்று சேரும், ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்
கருத்தொருமித்த தம்பதியராய்… சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்.. உதாரணத் தம்பதியராய்… ஊர் போற்ற உறவும் போற்ற… இணைபிரியாத வாழ்வினிலே.. நூறாண்டு காலம் வாழ்ந்திடவே… உளம் கனிந்த நல்லாழ்த்துக்கள்.. திருமண நாள் நல்வாழ்த்துகள்
இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை பெற வாழ்த்துகிறோம்
என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்து வாழ்க்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துக்கள்
ஊரே வியக்கும் வண்ணம் சிறந்த அன்பு கொண்ட நேசங்களாகி திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழும் தம்பதியராக இல்லறத்தில் புரிதல் உணர்வுடன் இரு நெஞ்சங்களும் சுற்றத்தாரின் வாழ்த்துகளோடு நூறாண்டு காலம் வாழ்ந்திட இந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
திருமண நாள் நல்வாழ்த்துக்கள். செல்வங்கள் கோடிகள் சேர்த்து, இலக்குகளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்
மௌனங்களாலும் வார்த்தைகள் மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில் அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்த்திட இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள்
வானம் போல எங்குமே நீயும் அவளும் நீக்கமற நிறைந்து காதலில் வற்றாத நீரை போல உங்கள் வாழ்வில் புன்னகை என்றுமே நீங்காமல் இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி நீண்ட ஆயுகோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டி வாழ்த்துகிறேன். இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.
அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த உங்கள் திருமண வாழ்க்கை இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.
நிலவிலிருந்து கைப்பிடி மண் கொண்டு வந்தமைக்கே கும்மாளமிடுவோர் மத்தியில் அமைதியாய் ஒரு நிலவையே தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான் இவன் இன்று
இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம் இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்..
வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த… இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி வந்த என் உயிரே இந்நாளில் நான் என் வாழ்க்கைக்கு அர்த்தமாக வந்தாய் நீ. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
வெள்ளி பாத்திரத்தில் மோதிரம் தேடும் போட்டி உனக்கும் எனக்கும்…… உன் தங்க விரல்களை பிடிப்பதற்காகவே உன்னிடம் தோற்க பழகுகிறேன் முதன் முறையாக….!
wedding கவிதை
அன்பை சுமக்கும் நீயும் அழகை சுமக்கும் அவளும் இணையும் திருமணத்தில் வாழ்த்துக்களை சுமந்து பூக்களாய் உங்கள் மீது போடுகின்றோம்…. வாழ்க வளமுடன்…
தெவிட்டதாத நல் வாழ்வும்
தெய்வப் பார்வையும் பெற்று
கண்ணும் காட்சியுமாய்
மணக்கும் சந்தனமாய்
திருமண நாள் வாழ்த்து பாடல் status
எம்முடன்
பல திருமண நாள் காண
வாழ்த்துகின்றேன்
தாரமாய் வந்து
தாயாய் மாறியவரே
தாதியுமாகி தாகம் தீர்ப்பவரே
happy wedding wishes in tamil words
சிப்பிக்குள்ளே முத்தாய்
சிதையாமல் காப்பவரே
கரம் பிடித்த இந்நன் நாளில்
வரம் ஒன்றை வேண்டுகிறேன்
wedding kavithai in tamil language
நும்பேச்சால்
எம்மின் உள்ளத்தை
நும்பால் வைத்துக் கொண்டவரே
வாழ்வின் பொருள் தருபவரே
வாழ்வின் பொருளானவரே
wedding wishes in tamil words
வாழ் நாள் பரிசாக
விலையில்லா
அன்பைத் தருகின்றேன்
அன்பான வாழ்க்கைக்கு
இவ்வாழ்த்துக்களே சாட்சி .
wedding day wishes in tamil text copy paste
அல்லும் பகலும்
அயராது கா ப்பவரே
அறுசுவை உணவு படைத்து
அகம் மகிழ்பவரே
என் இனிய மணமக்களே
அதிகமான அன்பு வேண்டாம்
மிகுதியான புரிதல் போதும்..
அக்கறை கூட வேண்டாம்
புறக்கணிப்பை புறந்தள்ளினால்
போதும்..
உங்களுக்கு என்ன பிடிக்கும்
என்பதை விட என்னவெல்லாம்
பிடிக்காது என்பதை பகிர்ந்து
கொள்ளுங்கள்..
கோபப்படுங்கள் உரிமையை கொடுத்து
உரிமையை எடுத்துக் கொள்ளுங்கள்..
சண்டை உங்களுக்குள் வரட்டும்
சமாதானப்படுத்த எவரும் தேவையில்லை..
உங்கள் உடலில் உள்ள அடையாளங்கள்
உங்களுக்கு முக்கியமில்லை..
உள்ளத்தில் உள்ளதை கண்களில்
காட்டி படித்துக் கொள்ளுங்கள்..
உணர்ச்சிகளை வெளிப்படுத்தி
உங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர்
பாதுகாத்துக் கொள்ளுங்கள்..
உங்களுக்குள் வரை முறை
தேவையில்லை நம்பினால் போதும்..
ஒருவருக்கொருவர் ஆராச்சி தேவையில்லை..
அவகாசம் கொடுத்தால் போதும்..
ஒவ்வொரு நிமிடமும் ரசித்து
கடந்திடுங்கள்
பிரச்சனையோ.. பிரியமோ.!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!