நட்பு கவிதை வரிகள் தமிழ்: நட்பு கவிதை வரிகள் தமிழ், Tamil Kavithaigal Natpu, நட்பு கவிதைகள், Natpu Kavithai In Tamil and many more in tamil language.
Table of Contents
நட்பு கவிதை வரிகள் தமிழ்
நீ நண்பர்களிடம்
மரியாதையை
எதிர்பார்த்தால்
அவர்களிடம் நெருங்கி
பழக்க முடியாது.
நண்பர்களிடம் நெருங்கி
பழகும் போது
மரியாதையை
எதிர்பார்க்க கூடாது.
நீ செய்த தவறை
சரி என நியாயப்படுத்தும்
நட்பை விட நீ செய்தது
தவறு தான் என்று
சுட்டிக்காட்டும் நட்பே
சிறந்த நட்பு.

நட்பிடம் போடும் ஆயிரம்
சண்டைகள் வலியை
ஏற்படுத்தாது. ஆனால்
ஒரு நல்ல நட்பின் மவுனம்
இதயத்தையே
உடைத்து விடும்.
வலிகள் கூட
நொடிப்பொழுதில்
மறைந்து விடும்.
உன்னை சுற்றி நல்ல
நண்பர்கள் இருப்பார்கள்
என்றால்.

நம் சந்தோசத்தின் மறு வடிவமாய்
நாம் மகிழும் போது மகிழ்ந்து
அழும் போது அரவணைத்து கொள்ளும்
ஒரு அக்கறையான சொந்தம் நட்பு
நம் சந்தோசத்தின் மறு வடிவமாய்
நாம் மகிழும் போது மகிழ்ந்து
அழும் போது அரவணைத்து கொள்ளும்
ஒரு அக்கறையான சொந்தம் நட்பு

அன்பான நண்பன் கிடைத்துவிட்டால்
அகிலத்தையே வென்றிடலாம்
அன்பாக எமை வழிநடத்தும்
அழகான பந்தம் நட்பு
எவ்வித துன்பம் வந்திட்ட போதும்
எமை அரவணைக்கும் உண்மையான நட்பு
வறுமை வந்திட்ட போதும்
எம் கை கோர்த்திடும் அன்போடு

Tamil Kavithaigal Natpu
ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் பிரகாசித்தாலும்
இரவுக்கு அழகு நிலவும் தான்.
அதே போலத்தான் ஆயிரம்
உறவுகள் மண்ணில்
இருந்தாலும் வாழ்க்கைக்கு
அழகு உண்மையான
நட்பு தான்.
நட்பு மற்ற உறவுகளை
விட மிகவும்
வித்தியாசமானது
இறக்கும் வரை பிரிக்க
முடியாதது தான் நட்பு.

சொந்தங்கள் என்பது
பனி துளி போன்றது
சிறு பொழுதில் மறைந்து
விடும். நட்பு என்பது
பரந்த வானம் போன்றது
உன்னை சுற்றி எப்போதும்
நிலைத்து நிக்கும்.
நட்பின் துரோகம் மிகக்
கொடூரமானது எக்காரணம்
கொண்டும் அதை செய்து
விடாதீர்கள் அதற்கு
வாழ்நாளில் பாவ
மன்னிப்பே கிடைக்காது.

நீ சண்டை போட்டு பிரிந்த
பிறகும் உன்னை பற்றிய
ரகசியங்களை வெளியே
சொல்லாவிட்டால் நீ
பிரிந்திருப்பது மிகச்
சிறந்த நட்பை அந்த
நட்பை எந்த காரணம்
கொண்டும் உதாசீனம்
செய்யாதே.
நண்பர்கள் என்ற
செல்வம் உன்னை
தேடி வர புன்னகை
என்ற ஒரு கருவி மட்டும்
உன்னிடம் இருந்தால்
போதும்.

அளவோடு பழகுவது நட்பல்ல
அதிக உரிமையோடு பழகுவதே நட்பு
ஆபத்து நேரத்திலும் அருகிலிருந்து
அறிவுரை சொல்பவனே சிறந்த நண்பன்
தவறு செய்யும் போது தட்டிக் கேட்டு
தளர்ந்து சோரும் போது தட்டிக் கொடுத்து
ஆலோசகனாய் ஆசானாய்
அனைத்துமாய் இருப்பவனே நண்பன்

நட்பு கவிதைகள்
துரியோதனுக்கு ஒரு கர்ணன் போல
குசேலனுக்கு ஒரு கண்ணன் போல
உண்மையாய் ஒரு நண்பனை அடைந்து
உயர்ந்து விளங்குவோமாக
நம் நண்பனை வைத்து
நாம் யார் என்று கூறிவிடலாம்
நல்ல நண்பனே – நம்
நல்வாழ்வின் நற்சான்று

அன்னையின் அன்பும்
தந்தையின் கண்டிப்புக்களும்
ஒன்றாக அமைந்த ஒரு உறவு
அனைத்தும் பொருந்திய நட்பு
நட்பு எனும் மூன்றெழுத்து
இவ் உலகத்தின் உயிர்மூச்சு
ஓர் உடலில் ஈருயிர் வாழ்வது
உண்மையான நட்பில் மட்டுமே

தனிமை நம்மை நெருங்கிடாது
துன்பம் நம்மை தொடர்ந்திடாது
மனதில் எங்கும் நிறைந்திடும்
மகத்தான உறவுவே நட்பு
ஈரேழுலகும் போற்றிடும் – ஒரு
இனிதான உறவு நட்பு
உலகிற்கே அன்பை பொழியும் – ஓர்
உன்னதமான உறவு நட்பு

பள்ளிக்கால நட்பைப் போல
பசுமையானது எதுவுமில்லை
பள்ளியில் தோள் சேரும் தோழமை
ஆயுள்வரை தொடர்ந்திட்டேல் பேரின்பம்
உலகமே திரண்டு எதிர்த்தாலும்
உன்னை விட்டு விலகாது என்றும்
நீ குற்றவாளியே ஆனாலும்
காப்பாற்றிட துடிக்கும் நட்பு

நல்ல நட்பே என்றும்
உலகத்தின் சிறந்த செல்வமாகும்
நல்லவனை நண்பனாக பெற்றுவிட்டால்
நானிலம் போற்றும் உன்னை
யாரிடமும் நம்மை விட்டுத் தராது
துன்பம் வரும்போது நம்மை கைவிடாது
நாம் கலங்கும் போது தோள் தரும்
ஈடு இணையில்லா உறவு நட்பு

Natpu Kavithai In Tamil
நாம் தவறு செய்யும் போது
ஊக்கப்படுத்துவது உண்மையான நட்பன்று
வாழ்வில் தவறிடும் போது
சுட்டிக் காட்டுவதே நட்பு
அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்
ஆபத்திலும் நம்மை கைவிடாது
கூட நின்று காப்பவனே
உண்மையான நண்பன்

முகமது நட்பது நட்பன்று
நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு
என்றான் வள்ளுவன் – உயர் நட்பினை
பெருமைபடுத்தாதோர் யாருளர் இவ்வுலகில்
உண்மையான நட்பென்பது
சிரித்து பேசுவது அன்று
உளமார நெஞ்சத்தில் தோன்றுவதே
உண்மையான நட்பு




நீ தடுமாறி கீழே விழும்
போது தாங்கி பிடிப்பவனும்
தடம் மாறும் போது தட்டிக்
கேட்பவனும் தான்
உண்மையான நட்பு..
எந்த உறவை மறந்தாலும்
நல்ல நட்பை யாரும்
வாழ்நாளில் மறப்பதில்லை.
நட்பு என்றால் உன் மனதில்
வைக்க வேண்டிய வரிகள்
பழகும் போது உண்மையாய்
இருக்க வேண்டும். பழகிய
பின்பு உயிராய்
இருக்க வேண்டும்.
- KAVITHAIGAL NATPU
- NATPU KAVITHAIGAL
- TAMIL KAVITHAIGAL NATPU
- நட்பு கவிதை
- நட்பு கவிதை வரிகள் தமிழ்