We have collected best quotes of One Line Kavithai, Short Kavithai.
- Short Kavithai
- One Line Kavithai In Tamil
- மிழ் ஒன் லைன் கவிதை
- தமிழ் கவிதை வரிகள்
One Line Kavithai
சில சமயங்களில் சுயபச்சாதாபம் கூட நிம்மதியைத் தருமாமே
அதிகாரத்தால் விலைக்குவாங்க முடியாததில் முதன்மையானது அன்பு
இதழ் தீண்ட ஒரு ஒத்திகை மலரிதழோடு
வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை தனிமை
எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு
மனதிற்கு பிடித்தமானவர்கள் செய்யும் அனைத்துமே அழகானவை தான்
நமக்கும் சேர்த்தே வேண்டிக்குற அந்த மனசுதான் கடவுள்
ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே எவ்ளோ போராட வேண்டியிருக்கு
சரினு பட்டா விட்டுக்கொடு தப்புனு பட்டா தள்ளி நில்லு
வாழ்க்கையில் பொறுமை உள்ளவனே பெரும் பாக்கியசாலி
தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் இல்லை
வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்..
உன்னை ஒரு படி மேலே ஏற்றிடவே வருகின்றன! மனம் தளராதே!
உன்னை தள்ளிவிட ஆயிரம் கைகள் வரும் ஆனால்
தாங்கி பிடிக்க ஒரே ஒரு கை மட்டுமே வரும் அது உன் தன்னம்பிக்கை மட்டுமே.!
பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது..
நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று…
தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும்,
எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை !
எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ
அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும்
எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரமில்லை என்பதே நிதர்சன உண்மை.
பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு கூடயிருந்து குழிபறிக்காம
வாய்ப்புகளை தேடி அலையாதே வாய்ப்புகளை உருவாக்கு…!
கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே
ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்
ஒருவரையொருவர் சரியாய் புரிந்திருந்தால் எந்த உறவும் அழகே…!
இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)
உன் அருகாமையில் நான் என் அகிலமாய் நீ
மௌனமாய் நீயுறங்க என் விழிகளிலோ பல கனவு
உனை நீங்கா வரமொன்று கேட்டேன்
வெட்கமும் விடை பெறுகிறது உன்னிடத்தில்
கனவாகவே போகட்டும் காயம்பட்ட காலமெல்லாம்
நீள்கிறது இரவு நீங்காவுன் நினைவில்
தனிமையும் இனிமை நினைவெல்லாம் நீயாக
மன கீறல்களுக்கு மருந்து உன் கிறுக்கல்கள்
நீ விழித்த பின்னே எனக்கும் விடியல்
இருளிலும் ஒளிவீசும் ஓவியம் நீ
தனிமையும் சுகமாகிறது இசையின் மேல் கொண்ட காதலால்
உன் நேசமே என் சுவாசம்
பிடிவாதத்தை எரித்துவிடுவோம் இல்லம் மற்றும் உள்ளம் மகிழ்சியாயிருக்க…!
அப்பாவின் அமைதி மொத்த தைரியத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது
சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே
அன்பின் செடியில் என்றும் புன்னைகைப் பூக்கள் மட்டுமே மலரும்
விடியல் என்பது கிழக்கிலல்ல நம் உழைப்பில்
விலையில்லாத அன்பும் புன்னகையும் யாரிடமிருந்தும் விலகி செல்வதில்லை
இருண்ட உலகின் ஒற்றை ஒளி விளக்கு அவள் மட்டுமே
நான் என்பது பல சமயங்களில் தலைக்கனம் சில சமயங்களில் தன்னம்பிக்கை
மனதோடு அழ பழகிக்கொள் கண்ணீரும் அடங்கிவிடும்
இருந்தால் நிஜமாயிரு இல்லயேல் நிழல் என்று கூறி மறைந்துவிடு
தொலைதலும் சுகமே தேடல் விருப்பமெனில்
பரிகாசங்களை விட பரிதாபமே நம்மை பலவீனப்படுத்தும்
கண்ணுக்குள் நுழைந்து கனவை தூண்டுகிறாய்
ஏமாளிகள் என்றுமே நம்பிக்கைக்கு உரியவர்கள்
சொல் மட்டுமல்ல சிலரின் செயல்களும் கொல்லும் மனதை
நாம் பழகும்விதமே நம்மை விரும்ப செய்யும்
மனிதர்களின் உயரம் என்பது அவரவர் மனதை பொறுத்தது
வாழவும் சொல்லும் சாகவும் சொல்லும் காதல்
எதிரி நண்பன் என்று தெரிந்தால் கடைசி நொடிவரை போராடு
வார்த்தைகளால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவது சிறப்பு
நம்பிக்கையில் கிடைக்கும் மன நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை
குழந்தைகளின் அறியாமை மிக அழகு
நேசிப்பதைவிட சுகமானது நேசிக்கப்படுவது
ஏழ்மையிலும் நேர்மை இறைவனுக்கு பிடித்தமான செயல்
சூழல்கள் மாற்றத்தால் சூழ்நிலை மாறும்
எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே
கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை
பிடித்ததை செய்வோம் இந்த வாழ்வை ரசித்து வாழ்வோம்
சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை
நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு
நேசங்கள் மெய்யானபின் வேசங்களுக்கு வேலையேயில்லை
சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்ப்பில்லா வரம் தான்
வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி புன்னகை
பாசம் கூடினாலும் பாரம் குறைந்தாலும் பாரம்
லட்சியங்களின் அடிப்படை அலட்சியங்களே
சம்பவங்கள் சரித்திரமாவது நியதி சரித்திரங்கள் சம்பவமாவது அநீதி
வாழ்வும் வரம் ஆளும் உன்னன்பில் அன்பே
பிரளயமே வந்தாலும் உனை பிரியேன் அன்பே
வேண்டியவர்கள் அருகிலிருந்தால் வேறெதுவும் தேவையில்லை
எந்த செயலானாலும் சிந்தித்து செய்யுங்கள்!
ஏனெனில் உங்களின் ஒரு செயல், உங்கள் எதிர்காலத்தையே மாற்ற வல்லது.
சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்!
அதுவே உங்கள் வாழ்வில் பெறும் தவறாக மாறவும் வாய்ப்புள்ளது.
இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே..
இறைதொண்டை விட இன்றியமையாததாகும்!
வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் பழகுவோமாயின் வேதனைகள் என்பதே நம் வாழ்வில் இருக்காது!!
எந்த சூழ்நிலையிலும் நினைவிருக்கட்டும் பயம் கொள்ளும் தன்னம்பிக்கை வெல்லும்…
சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கிக் கொண்டே நம்மை எழுந்து நடமாட வைக்கும்
நம் மனது தான் மிகச் சிறந்த நண்பன்! நம்மை நாமே நேசிப்போம்!
உன்னை நம்பு..
உன் உழைப்பை நம்பு..
உன் முயற்சியை நம்பு..
உனக்காக உதவி செய்வார்கள் என்று யாரையும் நம்பி விடாதே..!!
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்.
ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும்தான் வரும்…!
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது “நம்பிக்கை”
மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது”தன்னம்பிக்கை“
கற்றுத்தெளிவது கல்வி அறிந்து தெளிவது அறிவு
வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும்
கலப்படம் இல்லாத புன்னகை குழந்தைகளிடம் மட்டுமே
யோசித்துப்பார் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்
தேடலில் தொடங்கி எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை
வாழ்க்கை முடியும் வரையிலும் ஒரு புதிராகவே இருக்கிறது…!
மழலையாய் மனதை வைத்திரு கவலைகளும் தீண்டாது
நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்
உன்னை நீயே நம்பு உலகை வெல்ல அது தான் தெம்பு
அடுத்த நொடி எதுவும் நடக்கலாம் so கிடைத்த நொடியில் ரசிப்போம் வாழ்க்கையை
திணிக்கப்படும் எதுவும் ரசிக்கபடாது வேறு வழியின்றி மனம் ஏற்றுகொள்ளுமே தவிர
வாழ்க்கையை ரசிச்சுட்டு போங்க இங்க எதுவுமே நிரந்தரம் இல்லை
நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்கும் நட்பு நிரந்தரமானதில்லை
காலம் மட்டுமே மாறும் நினைவுகள் ஒரு போதும் மாறாது
உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை
பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்.
அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல…!
தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்…
அறியாத வயசு அறிய வைத்தது பசி
எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்…!
ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கைவாழ…
பொம்மையும் உயிர் பெற்றதே குழந்தைகளிடம் மட்டும்
கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்
வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே
அழுகை கூட அழகு தான் குழந்தைகளிடம் மட்டும்
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்
கொடுப்பதை வாங்கிக்கொள் முடிவை தெளிவாக எடு
ஒரு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சத்தைக் காண்பது இன்னும் பேரின்பம்
சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது
ஒருவருக்கு திரும்ப கொடுக்கவே முடியாதது அவர் நமக்கு செலவிட்ட நேரம்
ஆர்வமும் அரவணைப்பும் இருந்து விட்டால் உலகமே நம் கையில்
வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்
கணத்தில் உதித்த புன்னகையால் மனத்தின் கனம் குறைந்தது (மழலைகள்)
போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்…!
எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது
அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே
கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது
மனம் பணம் அதிகம் நேசித்தால் நிம்மதிபோயிரும்…!
எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்…!
தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ தட்டி இருக்கப் படுகின்றன ஆணிகள்
நாட்டமிடுகிறது குழந்தையின் அழகை கண்டு நாற்று…!
எந்த சூழ்நிலையிலும் நமக்கு ஆறுதல் நம் நம்பிக்கை மட்டுமே
கோபம் கூட நேசிப்பவர்கள் மேல் தான் அதிகம் வருகிறது
தொலைவை கடப்பதற்குள் தொலைந்து போகிறது வாழ்க்கை
இரவென்றால் இருளாய் நீயென்றால் நானடா
உனக்கான வாழ்க்கையை நீ எழுது வாழ்க்கை உனக்கானதாய் மாறும்
நினைத்த ஒன்று நினைக்காத நேரத்தில் கிடைப்பதென்பது பேரழகு
கடந்த பாதை வலிகள் தந்ததால் செல்லும் பாதை வழியாக மாறியது
நாம் அழுதால் மற்றவர்களும் அழவேண்டுமென்று நினைப்பது சுயநலத்தின் உச்சம்